Home> Business
Advertisement

பங்குச் சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கொரோனா... சென்செக்ஸ் இரண்டாவது முறையாக வரலாற்று சரிவு

பங்குச் சந்தைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு "கருப்பு நாள்'". உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.

பங்குச் சந்தையில் அழிவை ஏற்படுத்தும் கொரோனா... சென்செக்ஸ் இரண்டாவது முறையாக வரலாற்று சரிவு

புது டெல்லி: பங்குச் சந்தைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு "கருப்பு நாள்'". உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொல்லலாம். இதனால் உள்நாட்டு சந்தை சரிந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 1448.37 புள்ளிகள் (3.64%) இழந்து 38,297.29 ஆக முடிந்தது. இது சென்செக்ஸ் வரலாற்றில் இரண்டாவது பெரிய ஒற்றை நாள் சரிவு ஆகும். அதே நேரத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 414.10 புள்ளிகள் (3.56%) சரிந்து 11,219.20 ஆக முடிந்தது. 

2015 ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு பிறகு, சென்செக்ஸ் ஒரே நாளில் மிகப்பெரிய வீழ்ச்சி சந்தித்தது இதுவாகும். அதே நேரத்தில், 2009 க்குப் பிறகு நிஃப்டி மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

சென்செக்ஸ் 39,087.47 வரை சென்று இறுதியில் 38,219.97 ஆகவும் குறைந்தது. 11,384.80 புள்ளிகளுடன் ஆரம்பித்த நிஃப்டி நாள் வர்த்தகத்தில் 11,175.05 ஆக குறைந்தது. ஏறக்குறைய அனைத்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குகளும் சிவப்பு குறியீட்டில் காணப்பட்டன.

பி.எஸ்.இ.யில் 29 நிறுவனங்களின் பங்குகள் சிவப்பு குறியீடுடன் மூடப்பட்டன. ஒரு நிறுவனம் பச்சை நிறத்தில் மூடப்பட்டது. என்எஸ்இயில், 48 நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டன மற்றும் 2 நிறுவனங்களின் பங்குகளில் வாங்குவது பதிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகள் வீழ்ச்சியைக் காண்கின்றன. இது பெருநிறுவன சொத்துக்களில் பெரும் சரிவை ஏற்படுத்தி வருகிறது. உள்நாட்டு பங்குச் சந்தையில், மெட்டல் மற்றும் ஐடி பங்குகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பங்கு சந்தைகள் 6 நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. 6 நாட்களில் முதலீட்டாளர்கள் ரூ .10 லட்சம் கோடியை இழந்துள்ளனர். பெரிய தொழிலதிபர்கள் பில்லியன் கணக்கான ரூபாயை இழந்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி இந்த ஆண்டு 5 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்துள்ளார். ஆர்ஐஎல் 11 நாட்களில் பங்குச் சந்தையில் சுமார் ரூ .54 ஆயிரம் கோடியை இழந்துள்ளது.

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை 72.03 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

Read More