Home> Business
Advertisement

சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.

சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

போலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்கு முறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை  ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்  இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.

அதில் கூறிய முக்கிய விஷயங்கள்

சில விதிகளில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கிய கடுமையான மேற்பார்வை நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும், இந்த தளங்கள் "இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" பாதிக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை, பதிவுகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.
இந்த கட்டுபாடுகளில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் அடங்கும்

1) வயது மற்றும் பிரிவுகள் அடிப்படையிலான கட்டுப்பாடு

2) சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான 3 அடுக்கு வழிமுறைகள்

3) சட்ட நிறுவனத்திற்காக தொடர்பு கொள்ளும் அதிகாரி

4)  சர்சைக்குரிய உள்ளடக்கம் அல்லது பதிவுகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கை

5) விரைவான பயனர்கள் கணக்கு  சரிபார்ப்பு வழிமுறை

ALSO READ | போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்

மேலும், எங்கள் அரசு அத்தனை கேள்விகளையும், ஆலோசனைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் அவதூறுகளைப் பரப்பும் வதந்திகளை பரப்பவும் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதை நிச்சயம் ஏற்க முடியாது என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பெண்கள் குறித்த ஆபாசமான புகைப்படங்கள் தகவல்கள் இருந்தால் புகார் அளிக்கப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என சமூக வளைதள நிறுனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறை விதித்துள்ளது.

புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதமொருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ |அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கைக்கு பிறகு கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்...!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More