Home> Business
Advertisement

எச்சரிக்கை: EPFO-ல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போலி அழைப்பு அல்லது செய்திகள் வந்தால் மக்கள் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் உடனடியாக உள்ளூர் போலீஸ் அல்லது சைபர் கிரைம்க்கு புகாரளிக்க வேண்டும் என்று இபிஎஃப்ஓ கூறியுள்ளது.  

எச்சரிக்கை: EPFO-ல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களை மோசடி குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இபிஎஃப்ஓ அதன் கணக்குதாரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.  இணைய மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கையை அறிவித்திருப்பது மட்டுமின்றி இபிஎஃப்ஓ ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறது.  போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  ஒருபோதும் இபிஎஃப்ஓ அதன் சந்தாதாரர்களின் தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேட்பது கிடையாது.

மேலும் படிக்க | வங்கிகளில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டும்... அபராதம் எவ்வளவு? - முழு விவரம்

இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் அவர்களின் யூஏஎன் எண், பாஸ்வேர்டு, பான் எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி அல்லது வேறு எந்த தனிப்பட்ட விவரங்கள் அல்லது நிதி விவரங்களை யாருடனும் எப்போதும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.  இபிஎஃப்ஓ அல்லது அதன் ஊழியர்கள் செய்தி, தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற எந்தவொரு சமூக ஊடக தளத்திலும் உங்கள் விவரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்று இபிஎஃப்ஓ ​​தனது சந்தாதாரர்களுக்கு கூறியுள்ளது.  இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர் சமூக ஊடகங்களில் அல்லது தொலைபேசி அழைப்பு அல்லது மெசேஜ் மூலம் ஏதேனும் செய்தியைப் பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், இபிஎஃப்ஓ-ன் ஊழியர் என்று யாராவது கூறி உங்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இபிஎஃப்ஓ கூறியுள்ளது.

fallbacks

இதுபோன்ற போலி அழைப்பு அல்லது செய்திகள் வரும்போது உங்கள் விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் உடனடியாக இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அல்லது சைபர் கிரைம் கிளைக்கு புகாரளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.  சைபர் கிரைமில் ஈடுபடும் கும்பல் சாதாரண மக்களைத் தங்கள் மோசடி வலையில் சிக்கவைத்து அவர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து விடுகிறது.  அந்த மோசடிக்கார கும்பல் தொலைபேசி அழைப்புகள், செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் மக்களைத் தொடர்புகொண்டு, இபிஎஃப்ஓ-ன் ஊழியர்களைப் போல நடித்து, சந்தாதாரர்களின் இபிஎஃப் கணக்கு மற்றும் வங்கிக் கணக்கு போன்ற முக்கியமான விவரங்களை பெற்று அவர்களது வங்கி கணக்கிலுள்ள பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர்.

மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை - நிர்மலா சீதாராமன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More